காங்கிரஸ் ஆட்சியை இருபது ஆண்டுகாலம் பார்த்துவிட்டோம். நன்மையில்லை. தி.மு.க ஆட்சி செய்தபோது பண்ருட்டி ராமச்சந்திரன் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது சம்பந்தமாக சட்ட ஆலோசனையை எல்லாம் திரட்டிக் கொடுத்தார். அப்படியிருந்தும் அந்த ஃபைலை யாரும் சட்டை செய்யவில்லை. அதிமுகவும் பத்து வருடம் ஆண்டது. நன்மை எதுவும் வரவில்லை.
ஆகையால், கட்சி என்றாலே எங்களுக்கு இப்போது வெறுப்பாக இருக்கிறது. அதனால்தான் வோட்டு போடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். எல்லாக் கட்சியுமே சனியன்தான். இதில் எந்த சனியன் தேவலாம் என்றால் எப்படி பதில் சொல்வது. இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில், புத்தியுள்ள மக்கள் வோட்டுச் சாவடிக்குப் போகமாட்டார்கள்.'
- எண்பதுகளின் பிற்பகுதியில் ஜூனியர் விகடன் இதழுக்கு ராமதாஸ் அளித்த பேட்டியிலிருந்து.
வன்னியர் சங்கத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி உருவான கதையை மினிமேக்ஸ் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் வன்னியர்களின் அடிப்படை கோரிக்கைகள் என்ன? அதை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்கள், அரசியல் கட்சியாக மாறுவதற்கு எது அடிப்படையாக இருந்தது, கூட்டணி அரசியலில் பாமக இறங்கியதற்கு என்ன காரணம்? பாமக மீது வைக்கப்படும் விமரிசனங்கள் என்னென்ன? இப்படி பல முக்கிய விஷயங்களையும் இந்தப் புத்தகம் விவாதித்துள்ளது.

புத்தகத்தை எழுதியவர் ஆர். முத்துக்குமார். கிழக்கு பதிப்பகத்தின் முதன்மைத் துணை ஆசிரியராகவும் MiniMaxன் பொறுப்பாசிரியராகவும் இயங்கிவருகிறார். குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் இதழ்களில் நடப்பு அரசியல் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். அன்புள்ள ஜீவா, இந்திரா, பெரியார், மினிமேக்ஸ் வழியாக தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
புத்தகத்தை இணையத்தில் வாங்க
1 comment:
அவசரத்துல தலைப்பைக் கொஞ்சம் தப்பா படிச்சிட்டேன்!
ஹெஹெ!
Post a Comment