வை.கோவின் வசீகரம் மட்டுமே ம.தி.மு.கவை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. பேச்சுதான் அவருடைய பெரிய பலம். பதினைந்து ஆண்டுகள். ஆறு தேர்தல்கள். அனைத்தையும் தாண்டி கட்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கு விட்டமின் எம் வேண்டுமே…1996ல் சொத்துக்கணக்கு பற்றி வை.கோ பேசியதும் இப்போது பேசாமலிருப்பதும் ஞாபகத்திற்கு வருகிறது. வை.கோ பரம்பரை பணக்காரர் என்றெல்லாம் சொன்னாலும் செஞ்சிக்கோட்டை சரிந்து விழுந்த பின்னரும் கட்சியை தாங்குவதுதான் பெரிய ஆச்சர்யம்.
ம.தி.மு.கவை பற்றியும் வை.கோவை பற்றியும் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் இதிலிருந்து ஆரம்பிக்கலாம்.
- ம.தி.மு.க புத்தகம் பற்றி நூலாசிரியர் ஜெ.ராம்கி.

நூலாசிரியர் ஜெ.ராம்கி தமிழின் முக்கியமான வலைப்பதிவர்களுள் ஒருவர். தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியிருக்கிறார்.
புத்தகத்தை இணையத்தில் வாங்க
No comments:
Post a Comment